June 17, 2025 23:27:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய உயர் ஸ்தானிகர்- பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது, கடந்த ஒரு மாத இடைவெளியில் இருவரும் சந்தித்துக்கொண்ட இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

இலங்கை மற்றும் இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.