October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் 28 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு!

வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடற்கரை பகுதியில் 28 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா போதை பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

நாகர்கோவில் கடற்கரையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கள ரோந்து பணியின் போது கரையோரத்திற்கு அருகில் 3 சாக்குகளில் 96 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்களால் இந்த போதை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருக்கலாம் என்று கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

கடற்படையினரால் மீட்கப்பட்ட கேரள கஞ்சா கடற்படையின் மேற்பார்வையில் வடக்கு கடற்படைத் தளத்தில் தீ வைத்து அழிக்கப்பட உள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன.