July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் தடுப்பூசி திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய கொவிட்- 19 செயலணியின் தடுப்பூசி வழங்கல் திட்டம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அதிகமான தடுப்பூசிகள் கிடைக்கவுள்ள நிலையில், தடுப்பூசி வழங்கும் முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு முன்னுரிமைப் பட்டியலில் இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பினித் தாய்மார்கள் மூன்றாவதாகவும், அரச அதிகாரிகள் நான்காவதாகவும் தடுப்பூசி முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்று ஏற்படும் தீவிர அபாயமுள்ள பொது சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 30 முதல் 60 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.