July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ள குறுந்தகவல் சேவை அறிமுகம்

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸை பெற்றுக் கொள்வதற்கான இடம், நேரம் மற்றும் திகதிகளை எதிர்வரும் நாட்களில் குறுந்தகவல் மூலம் அறிவிப்பதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் தொடர்பான வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் 12 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது, கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் அளவைப் பெற்றுக்கொள்ள வரும் திகதி, இடம் மற்றும் நேரம் குறித்து குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும்.