October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

யாழ். மாவட்டம் அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரியாலை பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று (06) நேரடியாக சென்ற கடற்றொழில் அமைச்சர், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், படைத் தரப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, சட்ட விரோத மணல் அகழ்வு முற்றாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமாயின், பாதுகாப்பு தரப்பினர் காவலரண்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று பிரதேச மக்களினால் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடிய அமைச்சர், அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட விரோத மணல் அகழ்வை முழுமையாக கட்டுப்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.