June 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக நாடுகள் உடனடியாக இலங்கைக்கு உதவவேண்டும்; ஐ.நா.பிரதிநிதி ஹனா சிங்கர் வேண்டுகோள்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்காணிப்பதற்கும் கரையோர சமூகங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கணிப்பிடுவதற்கும் உலக நாடுகள் இலங்கைக்கு உதவ வேண்டும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தனது டுவிட்டர் பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் பலம் மற்றும் மீள் எழுச்சி பெறும் திறன் ஆகியவற்றை எதிர்பார்க்கும் அதேவேளை, உலகில் உள்ள இலங்கையின் சகாக்களை உடனடி உதவிகளை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

விசேட உபகரணங்கள் முதல்(தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள்,ஏற்படக்கூடிய எண்ணெய் கசிவினை கையாள்வதற்கான சாதனங்கள் மற்றும் சுத்திகரிப்பதற்கான பொருட்கள்,) பாதிப்புகளை கண்காணிப்பதற்கும் கரையோர சமூகங்களிற்கும் கடல்வாழ் உயிரினங்களிற்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கணிப்பிடுவதற்கும் உலக நாடுகள் உடனடி உதவிகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மிரளும்,எங்கள் சூழலை பாதுகாப்பது இந்த சவாலை எதிர்கொள்ள உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.