October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை 6 ஆம் திகதி ஆரம்பம்

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டின் சனத்தொகையில் 145 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஒகஸ்ட் மாதத்திலிருந்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.