July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவுக்கு அது தொடர்பில் அறிவித்துள்ள பிரதமர், அந்தந்த மாவட்ட செயலாளர்களின் ஊடாக உடனடியாக நிவாரண திட்டங்களை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் தாழ்நில பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல இடங்களில் மண்சரிவு அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் மேலும் அனர்த்தங்கள் ஏற்படலாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.