June 11, 2025 10:21:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வீதியில் செல்பவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்”; பேராசிரியர் அர்ஜுன டி சில்வா

இலங்கையில் பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கும் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளும் வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என வைத்திய நிபுணர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தகைய திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், தேவையற்ற போக்குவரத்து செயற்பாடுகளை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும் என்பதுடன், வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் முடியுமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் சிலர் தேவையில்லாமல் பயணம் செய்து வருவதாகவும், இது மிகவும் தவறான நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன். பயணக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது நல்லது இல்லை என்றும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான நோயாளிகள் இன்னும் அறிகுறியில்லாமல் இருக்கிறார்கள், மேலும் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில் தான் அதிகளவான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு செய்யாது நாட்டை முடக்கி பலனில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.