October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

file photo

இலங்கையில் நாளாந்த பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஸ்ரீலங்கா மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா மருத்துவ சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் சரியான தருணத்தில் பயணத் தடை விதிக்காமல் இருந்திருந்தால், நாட்டின் சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நோயாளர்களை தரையில் வைத்து சிகிச்சையளிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளின் வினைத்திறன்மிக்க தன்மையை அதிகரிக்கும் படியும் இரண்டாம் டோஸ் வழங்குவதை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு ஸ்ரீலங்கா மருத்துவ சங்கம் நேரமொன்றை ஒதுக்கித் தருமாரும் கேட்டுக்கொண்டுள்ளது.