June 12, 2025 7:57:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு, கிழக்கு வைத்தியசாலைகளில் தாதிமார் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்!

இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி நாட்டில் 9 மாவட்டங்களில் சுகாதார ஊழியர்கள் இன்று காலை முதல் அரைநாள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்படி இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை தமது கடமைகளில் இருந்து வெளியேறி  வைத்தியசாலைகளுக்கு முன்னால் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தாதியர்களும் ஈடுபட்டிருந்தனர்.

இதன்படி இன்று காலை முதல் அரைநாள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த யாழ். மாவட்ட தாதியர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட தாதியர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.