October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ் அதிகாரியின் மனைவியை கடத்திச் சென்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் மீது முறைப்பாடு!

குற்றப்புலனாய்வுப் பிரிவின் (சிஐடி) உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தனது மனைவியை கடத்திச் சென்றதாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;

கிடைத்த தகவல்களின்படி, தனது வாகனத்தில் கண்டி வீதியில் இரவு 9.45 மணியளவில் தனது மனைவியுடன் குறித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சென்று கொண்டிருந்தார் எனவும், அவர்களை துரத்திச் சென்ற போது, கண்டி வீதியில் உள்ள தலுகம களனிய பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டிற்குள் வாகனம் நுழைந்ததாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் சிறு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிரிபத்கொட பொலிஸ் நிலையத்துக்கு வந்து முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டை தொடர்ந்து, கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.