October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டின் சுகாதார துறையை விடவும் பொருளாதாரம் மிக முக்கியமானது; அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

வைத்திய நிபுணர்கள் கூறுவதை போல் வருடம் பூராகவும் நாட்டை முடக்கி வைத்துக் கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும்.நாட்டின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது அவசியமானதே,ஆனால் அதை விடவும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொவிட் என்பது உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு தொற்றாகும்.நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறு ஒரு அழிவு வந்தது. இப்போது மீண்டும் அவ்வாறான அழிவொன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஏனைய நாடுகளை போன்றே நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம்.ஆகவே இந்த தாக்கங்களுக்கு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது எனக் கூறியுள்ள அவர்,ஏனைய நாடுகளை விடவும் நாம் பாதுகாப்பான நிலையில் உள்ளோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல நாட்டின் சுகாதாரத்துறை வீழ்ச்சி காண்பதை போல் அல்ல,நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் பாரிய நெருக்கடியை சகலரும் எதிர்கொள்ள நேரிடும்.

ஒரு நாளைக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக மாத்திரம் 800 இலட்சம் ரூபா செலவாகின்றது.ஏனைய சகல சுகாதார செயற்பாடுகளுக்கும் கோடிக்கணக்கான பணம் செலவாகின்றது. எனவே நாட்டின் சுகாதாரம் அவசியம். ஆனால் அதைவிடவும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.