October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை வியாபாரிகளிடமிருந்து வாங்கும் முயற்சியை அரசாங்கம் கைவிடவேண்டும்’

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாது வியாபாரிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். வியாபாரிகளிடம் பெற்றுக் கொள்ளும் போது போலியான தடுப்பூசிகளை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தொற்று நோய்கள் குறித்த நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை நினைத்தவுடன் வியாபார சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாது.எவ்வாறெனும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வோம் என கூறும் அரச அதிகாரிகளுக்கு இது விளங்கவில்லை.எங்கிருந்தாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம், அதற்கு எவ்வளவு பணம் கொடுக்கவும் தயார் என பேசுகின்ற அதிகாரிகளுக்கு ஒன்றை கூறிவைக்க விரும்புகிறேன்.

வியாபாரிகளிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் போது அது போலியான தடுப்பூசியாக இருக்கலாம்.இதனை சீரம் நிறுவனம் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.எனவே அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை எடுக்கக்கூடாது.தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை முறையாக தொடர்பு கொண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.