![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-31-at-14.56.43-e1622453664513.jpeg?fit=547%2C342&ssl=1)
ஷங்ரில்லா ஹோட்டலில் பிறந்ததின நிகழ்வை ஏற்பாடு செய்த 15 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டவர்களே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்திமால் ஜயசிங்க, பியுமி ஹன்சமாலி ஆகியோர் ஒரு மில்லியன் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு கொண்டுசெல்வதையிட்டு, இவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்ட ஏனையோரையும் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.