May 27, 2025 17:06:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர் அறிமுகம்!

அத்தியாவசிய தேவைகளுக்காக கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, கல்கிசை, வத்தளை போன்ற பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒரே வாகனம் பல தடவைகள் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று ஒட்டப்படும் ஸ்டிக்கர் இன்றைய தினத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதோடு, நாளை வேறொரு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், போலியான தகவல்களை வழங்குகின்றவர்களின் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படாது என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் எச்சரித்துள்ளார்.