July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடலில் மூழ்கும் ‘எக்ஸ்-பிரஸ்பேர்ல்’ கப்பல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

பாணந்துறை முதல் நீர்கொழும்பு – கொச்சிக்கடை வரையான கடல் பிரதேசங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான கப்பல் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் திணைக்கம் தெரிவித்தள்ளது.

இந்த அறிவித்தலுக்கமைய குறித்த கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களை உடனடியாக அங்கிருந்து கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கப்பல் கடலில் மூழ்கினால் அதில் இருக்கும் எரிபொருளால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு கரையோர பிரதேச மக்களுக்கு அறிவிக்குமாறு கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளரினால் மாவட்ட உதவிப் பணிப்பாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.