July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழ்.மாவட்டத்தில் மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன’

கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் மூன்றாவது நாளில் (செவ்வாய்க்கிழமை) 13 ஆயிரத்து 892 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 70.99 வீதமானோர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்.மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 83 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு ரீதியாக 11 கிராம அலுவலகர் பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 19 ஆயிரத்து 569 பேருக்கு தடுப்பூசி வழங்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 13 ஆயிரத்து 892 பேர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.