October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அங்கொடை முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் கொவிட் தொற்று!

கொரோனா

அங்கொடை, சிறிபெரகும் வீதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் உள்ள 29 முதியவர்கள் மற்றும் பராமரிப்பு பணிகளை முன்னெடுக்கும் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த முதியோர் இல்லத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

இதையடுத்து முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அனைவருக்கும் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்திலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே சென்று வரும் நிலையில், அவர் மூலமாக ஏனையோருக்கு தொற்று பரவல் அடைந்துள்ளதாக கொதட்டுவ பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த முதியவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நோய் நிலைமைகளை உடையவர்கள் என்பதால் இவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் காரணமாக குறித்த முதியோர் இல்லத்தை தனிமைப்படுத்தல் மையமாக மாற்றி தொற்றுக்குள்ளான வயோதிபர்களை அதில் வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசித்து தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.