July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுவுக்கு ஏழு உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமனம்

கொழும்பு துறைமுக நகர (போர்ட் சிட்டி) பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று நியமித்துள்ளார்.

போர்ட் சிட்டி ஆணைக்குழுவுக்கு ஏழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திறைச்சேரி முறியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியன் பந்து விக்கிரம, இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் தலைவர் சாலிய விக்கிரசூரிய, ஓரல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் துஷான் கொடிதுவக்கு, மர்கன்டைல்ஸ் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஜெராட் ஒன்டச்சி மற்றும் மெக்லரன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஹான் டி சில்வா ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.