October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குருநாகல் பொலிஸ் நிலையத்தில் நகர மேயருக்கு பிறந்ததின நிகழ்வை நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்!

குருநாகல் பொலிஸ் நிலையத்தில் பிறந்ததின நிகழ்வை ஏற்பாடு செய்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவவின் பிறந்த தினத்தை முன்னிட்டு குருநாகல் பொலிஸ் நிலையத்தில் இவ்வாறு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட பிறந்ததின நிகழ்வு தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா ஆபத்தில் இருந்து நாடு மீண்டு வரப் பிரார்த்திக்கும் 7 நாள் பிரார்த்தனை நிகழ்வொன்றும் குருநாகல் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்று இருப்பதாகவும், அதிலே தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரார்த்தனை நிகழ்வுக்கு நகர மேயர் வந்தபோதே, பிறந்ததின நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குருநாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.