July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சினோபார்ம்’ தடுப்பூசியின் 2 ஆம் டோஸ் ஜூன் 8 முதல் வழங்க நடவடிக்கை: இராணுவத் தளபதி

இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியின் 2 ஆம் டோஸை ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாம் டோஸ் பெற்றுக்கொண்டவர்கள் ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் இரண்டாம் டோஸைப் பெற்றுக்கொள்ளலாம் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

முதலாம் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட அதே தடுப்பூசி நிலையத்தில் பொதுமக்கள் இரண்டாம் டோஸைப் பெற்றுக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவின் ‘சினோபார்ம்’ தடுப்பூசி ஆரம்பத்தில் இலங்கையில் உள்ள சீனர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டது.

சினோபார்ம் தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அவசர பாவனைக்கு அனுமதித்ததைத் தொடர்ந்து, மே 8 ஆம் திகதி இலங்கையில் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.

சீனாவின் இரண்டாம் தொகை தடுப்பூசிகளை கிடைத்துள்ள நிலையில், ஜூன் 8 முதல் இரண்டாம் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.