![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/14556571_651464585035439_7864640094486281318_o.jpg?fit=1024%2C576&ssl=1)
File Photo
இலங்கை முழுவதும் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிமார்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொவிட் சிகிச்சை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தாதிமார் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.
தாதிமாரின் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அதற்காக தீர்வை தராதமையினால் தொழிற்சங்க ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இன்று காலை முதல் நாளை காலை வரையில் தமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் தாதிமார் விடுமுறையில் வீட்டில் இருப்பார்கள் என்று மெதிவத்த தெரிவித்துள்ளார்.