June 13, 2025 20:48:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் மேலும் 200 ஏக்கர் நிலப் பகுதியை விற்கத் திட்டமிடப்படுவதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

துறைமுக நகரத் திட்டத்திற்கு சமாந்திரமாக கொழும்பு கோட்டை பகுதியில் மேலும் 200 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டுக்கு விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவதுவல தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை பத்திரமும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கமைய அரசாங்கத்தினால் வெளிவிவகார அமைச்சு அமைந்துள்ள காணி, கபூர் கட்டடம் அமைந்துள்ள காணி, கிரேண்ட் ஒரியன்ட் ஹோட்டல் அமைந்துள்ள காணி ஆகிய இடங்கள் வெளிநாட்டுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜே.சி.அலவதுவல தெரிவித்துள்ளார்.

மேலும் தாமரைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள சில காணிகளும் விற்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.