July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த 40 இந்திய மீனவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

(file photo)

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 40 இந்திய மீனவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

நான்கு மீன்பிடி கப்பல்களில் மன்னார் கடல் பரப்பில் இவர்கள் அத்துமீறி பிரவேசித்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் 24 மணி நேரமும் கடற்படை ரோந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வழமையாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற போதும் கொரோனா அச்சம் காரணமாக 40 இந்திய மீனவர்களையும் திருப்பி அனுப்பியுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.