
2022 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளன.
முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022 ஜனவரி 31 ஆம் திகதியில் 5 வயதை பூர்தி செய்யும் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதன்படி அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது வீடுகளுக்கு அருகில் உள்ள மூன்று மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட 6 பாடசாலைகளுக்காவது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்றும் தகுதியுடைய பாடசாலைக்கு பிள்ளை அனுமதிக்கப்படுமென்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.