June 14, 2025 14:25:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பமானது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள், வடக்கு மாகாண ஆளுநரால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஆகியோரிடம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளன.

நாடு பூராகவும் தடுப்பூசி வழங்கும் திட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ். மாவட்டத்திற்காக முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பபட்டுள்ளன.

இன்று காலை 8 மணி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக அதிக அளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.