
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 6 பேர் மே 29 ஆம் திகதியும், மே 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலும் 36 பேரும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,045 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினத்தில் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 180,538 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 2,029 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 148,391 ஆக உயர்வடைந்துள்ளது.