July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் பணிப்புரை

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

கப்பல் தீவிபத்தால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்கு உஸ்வெடகெய்யாவ கடற்கரை பகுதியில் கண்காணிப்பு சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டபோதே, பிரதமர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது, கடல் சூழலைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கடல் பாதுகாப்பு மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது போன்ற பேரழிவுகளைச் சமாளிக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கப்பல் தீ விபத்திற்குள்ளானமையால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் அன்றாட மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர், துறைசார் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

This slideshow requires JavaScript.