June 14, 2025 2:19:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடமராட்சியில் முன்னாள் போராளி ஒருவர் வெடிபொருட்களுடன் கைது

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருட்களுடன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இராணுவச் சிப்பாய் ஒருவரை தாக்கி தலைமறைவாகி இருந்த பின்னர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரே அவரது மீன்வாடியில் வைத்து வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கிளைமோர் வெடிகுண்டு, சார்ஜர் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.