June 17, 2025 5:20:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாட்டால் வருமானம் இழந்த குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு

Covid Related Images

இலங்கை முழுவதும் மே 21 ஆம் திகதி முதல் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் இந்தக் கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தினக் கூலி அடிப்படையில் தொழில் செய்பவர்கள், வேறு வகையில் வருமானங்களை இழந்த குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த வருடத்தில் இதேபோன்று நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் மக்களுக்கு நிவாரணக் கொடுப்பனவாக 5000 ரூபா வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.