July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஜூன் 8 ஆம் திகதி முதல் செலுத்தப்படும்: சுகாதார அமைச்சு!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் எதிர்வரும் ஜுன் மாதம் 8 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (27)அதிகாலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL 869 விமானத்தினூடாக சீனாவிலிருந்து இந்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், தற்போது சீனாவிடம் இருந்து அன்பளிப்பாக கிடைத்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் 375,000 தடுப்பூசிகளை இரண்டாவது டோஸுக்காக வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், மிகுதியான 125,000 தடுப்பூசிகள் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்ட மக்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கைக்கு கிடைத்த சினோபார்ம் தடுப்பூசி 5 இலட்சத்து 21470 பேருக்கு செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.