June 15, 2025 20:18:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியானது!

பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட ஏழு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரச வங்கிகள், கிராம சேவகர்கள், உள்ளூராட்சி பிரிவுகள், மற்றும் மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட சேவைகளை அத்தியாவசிய சேவையாக விசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.