July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

910 மில்லியன் ரூபா நிதி மோசடி: தனியார் வங்கியின் முன்னாள் பணிப்பாளர் கைது!

மஹரகம பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 910 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பணிப்பாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதான சந்தேக நபர் மொனராகலை – பிபிலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேக நபர் வத்தேகெதர கூட்டுறவு வங்கியின் முன்னாள் பணிப்பாளரான பிரியங்க நிஷாந்த குமார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நிதி மோசடி சம்பவம் 2017-2018 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, சந்தேக நபர் நுகேகொடை கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.