October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலையால் இலங்கையின் பல பகுதிகளிலும் மின் தடை!

Electricity Power Common Image

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பிரதேசங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

சுமார் 76 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.

தம்புள்ளை, கேகாலை, இரத்தினபுரி, பலாங்கொடை, ஹொரன, இங்கிரிய, குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசியதன் காரணமாக மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததிலும், மின் இணைப்புகள் மீது மரங்கள் விழுந்ததிலும் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

1987 என்ற இலக்கத்தின் ஊடாகவும் மின்சார சபை இணைய செயலி ஊடாகவும் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.