June 13, 2025 16:32:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு மேலும் ஒருதொகை ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை சீனா நன்கொடையாக வழங்கியது

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் ஒருதொகை ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் குறித்த தடுப்பூசி தொகை இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

5 இலட்சம் டோஸ்கள் இவ்வாறாக இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்த தடுப்பூசி தொகையை பொறுப்பேற்பதற்காக பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, சீனத் தூதுவரால் குறித்த தடுப்பூசி தொகை உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சீனாவினால் நன்கொடையாக இதற்கு முன்னர் 6 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை எதிர்வரும் வாரங்களில் மேலும் இரண்டு மில்லியன் டொஸ் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.