July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி 2 ஆம் டோஸ் கோரி றிஜ்வே மருத்துவமனையில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடியதில் பதட்டம்

கொரோனா தடுப்பூசியின் 2 ஆம் டோஸ் கோரி கொழும்பு சீமாட்டி றிஜ்வே மருத்துவமனையில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடியதில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கப்படுவதாக வெளியான வாட்ஸ்அப் செய்தியை அடுத்து, மூவாயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

மருத்துவத் துறையினருக்கும் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கும் மாத்திரம் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை மீறி ஒன்று கூடியதில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.