June 13, 2025 14:43:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொட்டகலையில் மின்னல் தாக்கத்தால் பாதிக்கபட்ட 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை டிரெட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலையக பகுதிகளில் இன்று காலை முதல் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில் டிரெட்டன் தோட்டத்தில் தேயிலை மலையொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளான 17 தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து அந்த இடத்தில் மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நண்பல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.