July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலையில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம், 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து திருகோணமலையில் 2,695 ஆக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட 6 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் உயிரிழந்ததையடுத்து இதுரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், குறிஞ்சாக்கேணி மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் 16 பேரும், கிண்ணியா மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் 14 பேரும், திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், கந்தளாய், கோமரங்கடவை, தம்பலகாமம் ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில்  6 பேர் உட்பட மொத்தம் 61 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி வீடுகளில் இருந்து வெளியே செல்லாது கவனமான செயற்படுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரேமானந்  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.