October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய வெசாக் விழா இரத்து செய்யப்பட்டது

நாட்டில் நிலவும் கொரோனா நெருக்கடி காரணமாக தேசிய வெசாக் விழா இரத்து செய்யப்பட்டுள்ளது என்று பௌத்த விவகார ஆணையகத்தின் ஆணையாளர் ஜெனரல் சுனந்த காரியபெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வெசாக் விழா குறித்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த றிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் தற்போதைய கோவிட் -19 நிலைமை காரணமாக, நயினாதீவு நாகதீப புராண விகாரையில் நடைபெறவிருந்த தேசிய வெசாக் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்,பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பில் உள்ள ஹுனுபிட்டி கங்காராமய விகாரையில் நடைபெறவிருக்கும் வெசாக் விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 3 வெசாக் நினைவு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.இறுதி முத்திரை மே 24 ஆம் திகதியன்று வெளியிட எதிர்பார்த்திருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையில் அதனை வெளியிடுவது தொடர்பில் இருந்து முடிவெடுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.