July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து எம்.பிக்களான இஷாக், அலிசப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கட்சியின் மத்திய குழு தீர்மானத்துக்கு எதிராக, போர்ட் சிட்டி சட்டமூலத்துக்கு வாக்களித்த காரணத்தினால் இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பதில் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட் தலைமையில் ‘கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்டமூலத்துக்கு வாக்களிப்பதில்லை’ என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.