June 11, 2025 13:56:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக வலைத்தளங்களில் போலி செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் அரச ஊழியர் கைது!

Social Media / Facebook Instagram Twitter Common Image

சமூக வலைத்தளங்களில் மக்களை தவறாக வழிநடத்தும் போலி செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூலம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அரச ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் இடம் ஒன்றில் வெட்டப்பட்ட காடுகளை, பெரும் காடழிப்பாக சித்தரித்து, பேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் பகிர்ந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் கொத்மலை பிரதேச காணி நிர்வாக உதவி ஆணையாளராக செயற்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை இன்று கொழும்பு கோட்டை பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.