July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 3 நாட்களில் 10,570 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்: 108 மரணங்கள் பதிவு!

இலங்கையில் இன்றைய தினத்தில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 158,324 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,828 பேர் குணமடைந்து இன்றைய தினத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 125,360 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அந்தவகை கடந்த 5 நாட்களில் மாத்திரம் 15,000 ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10,570 பேர் கடந்த 3 நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை 1089 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவற்றில் 108 மரணங்கள் கடந்த 3 நாட்களில் பதிவாகியுள்ளன.