June 13, 2025 19:46:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இரண்டு வாரங்களுக்கு நாடு முடங்காது”; போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்கிறார் இராணுவத் தளபதி

photo: Sri Lanka Army Media

நாட்டை 14 நாட்கள் முழுமையாக முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போலித் தகவல் பிரசாரம் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஜுன் முதலாம் திகதி முதல் 14 நாட்கள் முழு நாடும் முடக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்படும் தகவல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற போலி செய்திகளையம், வதந்திகளையும் பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று இராணுவத் தளபதி கேட்டு கொண்டுள்ளார்.