![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-22-at-6.14.20-PM.jpeg?fit=1024%2C576&ssl=1)
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹரான் ஹசீமின் அடிப்படைவாத போதனை வகுப்புகளை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் மாவனெல்லை ஹெம்மாத்தகம பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 29 வயதுடைய ஒருவர் நேற்று இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்தேகநபர் மூதூர், மாவனெல்லை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் அடிப்படைவாதத்தை தூண்டும் வகையிலான போதனை வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டில் மேலும் 5 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.