June 15, 2025 9:19:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா அச்சுறுத்தல்; சிறைச்சாலைகளில் இடநெருக்கடியைக் கட்டுப்படுத்த சட்டமா அதிபர் பரிந்துரை

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறைச்சாலைகளில் இட நெருக்கடியைக் கட்டுப்படுத்த சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை வழங்கியுள்ளார்.

நீதி அமைச்சின் செயலாளர் இதுதொடர்பாக சட்டமா அதிபரிடம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்வேறு குற்றங்களுக்கும் பிணை வழங்குவது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் புதிய வழிகாட்டல்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது.

போதைப்பொருளுடன் தொடர்புடைய சிறிய குற்றங்களுக்கு பிணை வழங்குவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் சட்டமா அதிபர் பரிந்துரைத்திருந்தார்.

தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குதல் மற்றும் குற்றப் பத்திரம் தாக்கல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிறைச்சாலைகளின் இடநெருக்கடியைக் குறைக்க, சிறிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.