![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/9ddd84ad-9b4f-481f-b8f9-83bf29ff8492.jpg?fit=1024%2C683&ssl=1)
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகளை அரசாங்கம் மாத்திரம் இறக்குமதி செய்யலாம் என்ற ஏகபோக கட்டுப்பாடு நாட்டை நெருக்கடிக்குள் இட்டுச் செல்லும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசிகளை தனியார் துறை இறக்குமதி செய்ய அனுமதி வழக்கப்படாமைக்குரிய காரணத்தை வெளிப்படுத்துமாறும் எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
வசதிபடைத்த தனியார் துறையினர் அன்பளிப்பாக தடுப்பூசிகளை வழங்க முன்வந்த நிலையில், அவை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு தனியார் துறையினர் தடுப்பூசிகளை அன்பளிப்பு செய்ய முன்வந்தபோது, தடுப்பூசி ஒன்றில் பெறுமதி 2.15 டொலர் என்றும் தற்போது அவற்றை அரசாங்கம் 5.15 டொலருக்கு கொள்வனவு செய்ய முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.