
நாட்டு மக்களிடம் இன, மத, ஒற்றுமை, சமாதானம் நிலவ வேண்டுமென சுதந்திர தின நாட்களில் மன்னாரில் இருந்து கொழும்புக்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் ‘சாக்கு சாமியார்’ என அழைக்கப்படும் கிறிஸ்தோபர் கிருஷ்ணன் டயஸ் நேற்று காலமானார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியா சென்ற நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக நேற்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் நிலவவும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக தங்களை அர்பணித்து வரும் சுகாதார தரப்பினர், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு படையினர் உட்பட அனைவரின் நலம் வேண்டியும் அவர் மன்னாரில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மன்னார் தள்ளாடி புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து 41 நாட்கள் நிலத்தில் சாக்கை விரித்து அனுராதபுரம் வரைக்கும் உருண்டு சென்றார்.
அதனைத் தொடர்ந்து 2 ஆவது தடவையாக 2020 இல் சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் தீவு நுழைவாயில் பகுதியில் 50 நாட்கள் பேசாமலும் உண்ணாமலும் மட்டும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சிறிதளவு பசும் பால் அருந்தி தவம் இருந்மத’ஃ
அத்துடன் 3 ஆவது தடவையாகஇந்த வருடம் மன்னாரில் இருந்து கொழும்பிற்கான பாத யாத்திரையை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையிலே அண்மையில் இந்தியா சென்ற நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக அவர் காலமாகியுள்ளார்.