
இலங்கை 14 மில்லியன் ‘சினோபார்ம்’ தடுப்பூசி டோஸ்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
குறித்த தடுப்பூசி தொகை ஜூன் வாரம் ஆரம்ப பகுதியில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இதனிடையே, மேலும் 5 இலட்சம் தடுப்பூசி டோஸ்களை சீன அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் 5 இலட்சம் தடுப்பூசி டோஸ்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை வந்தடையும் என்றும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சீனா ஏற்கனவே 6 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.