![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/09/Parliament_850x460_acf_cropped-9-800x445-1.jpg?fit=800%2C445&ssl=1)
கொழும்பு துறைமுக நகரத்தின் பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்றும், இன்றும் அந்த சட்டமூலம் குறித்த விவாதம் நடத்தப்படுவதுடன், அந்த விவாதம் முடிவடைந்த பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
குறித்த சட்டமூலத்தில் சில விடயங்களை நிறைவேற்ற வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகும் என்று உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று சட்டமூலத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற நடவடிக்கையெடுப்போம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று மாலை அது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.